May 6, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பலி
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பலி

Share:

மூவார், நவம்பர்.23-

ஜோகூர், பாகோ அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர். இரவு 11 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களும் ஒரு லாரியும் ஈடுபட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் 20 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் லாரியின் பின்புறம் மோதியதால் விபத்து ஆரம்பித்தது தெரிய வந்துள்ளதாக மூவார் மாவட்டக் காவற்படைத் தலைவர், உதவி ஆணையர் ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மீது, பின்னால் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதியதில் இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டிய 24 வயது இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையிலும் உடலிலும் பலத்த காயம் அடைந்த இந்த இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது. விபத்தில் சிக்கிய மற்ற மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்