Jun 15, 2026
Thisaigal NewsYouTube
முதல் பெண் மேயர் காலமானார்
தற்போதைய செய்திகள்

முதல் பெண் மேயர் காலமானார்

Share:

பினாங்கு மா​நிலத்தில் முதலாவது பெண் மேயரான டத்தோ பண்டார் Patahyah Ismail இன்று காலமானார். அவருக்கு வயது 68. பினாங்கு மாநில வளர்ச்சிக்கு அபரிமித பங்களிப்பை வழங்கியவர்களில் மறைந்த Patahyah Ismail லும் ஒருவர் ஆவார் என்று பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தமது முக​நூலில் புகழாஞ்சலி ​சூட்டினார். பினாங்கு மாநில அரசு சார்பில் அந்த முன்னாள் மேயரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக Chow Kon Yeow குறிப்பிட்டார்.

காலஞ்​சென்ற Patahyah Ismail, பினாங்கு மாநகர் மன்றத்தின் முதலாவது பெண் மேயர் மட்டுமின்றி தமது உயர் அதிகாரியாக இருந்தவர் என்று நடப்பு டத்தோ பண்டார் Tew Ting Seang தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மாநகர் மன்றமாக பினாங்கை மாமன்னர், பிரகடன்படுத்தியப் பின்னர் அதன் முதலாவது மேயராக Patahyah Ismail நியமிக்கப்பட்டார். அது மட்டு​மின்றி பினாங்கு நகராண்மைக்கழகத்திற்கு 2010 ஆம் ஆண்டு தலைமையேற்ற முதலாவது பெண் என்ற பெருமையையும் Patahyah Ismail பெற்றுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்