Mar 22, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது

Share:

மலாக்கா, ஜூன் 18-

கடந்த ஜுன் 9 ஆம் தேதி, மலாக்கா, மஸ்ஜித் தானா, ஜெராம் தேசியப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு இரண்டு ஆசிரியர்கள் உட்பட நால்வர் பலியான சம்பவம் தொடர்பில் சவப்பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

மேல் நடவடிக்கைக்காக அந்த அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அந்த அறிக்கையை முறைப்படுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தும் நிறைவுப்பெற்றப் பின்னரே இந்த விபத்திற்கு காரணமானவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கோர விபத்தில் இரண்டு ஆசிரியர்கள், பேருந்து துணை ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாக உதவி அதிகாரி ஆகியோர் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

பேருந்து ஓட்டுநர் சொற்ப காயங்களுக்கு ஆளாகியுள்ள வேளையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று டத்தோ நூர் ஹிசாம் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு