Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண சிறப்பு நிதி ஒதுக்கீடு தேவை
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண சிறப்பு நிதி ஒதுக்கீடு தேவை

Share:

ஷா ஆலாம், நவம்பர்.18-

சிலாங்கூர் ஶ்ரீ மூடா மற்றும் புக்கிட் லங்சோங் முதலிய பகுதிகளில் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், தாம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கோத்தா கெமுனிங்கில் நிலவி வரும் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் 2026 ஆம் ஆண்டு மாநில பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ், தாமான் கிரின்வில், புக்கிட் கெமுனிங் மற்றும் பூங்கா இண்டா போன்ற பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மக்களைச் சிரமத்தில் ஆழ்த்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

இப்பிரச்னையைக் களைவதற்கு வெள்ளத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிரகாஷ் வலியுறுத்தினார்.

அதே வேளையில் பத்து 7 மற்றும் புக்கிட் கெமுனிங் முதலிய பகுதிகளில் கால்வாய் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அரசை வலியுறுத்தினார்.

மேலும் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு நிவாரண நிதியாக மூவாயிரம் ரிங்கிட் முதல் ஐந்து ஆயிரம் ரிங்கிட் வரை உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன் வெள்ள இடரை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளுக்கு காப்புறுதித் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரகாஷ் வலியுறுத்தினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்