Mar 17, 2026
Thisaigal NewsYouTube
50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு
தற்போதைய செய்திகள்

50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு

Share:

நோன்புப் பெருநாளையொட்டி நாடு முழுவதும் 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அத்தகவலை அறிவித்திருக்கிறார்.

இந்நடவடிக்கையால், டோல் சாவடிப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அரசாங்கம் சுமார் 21.03 மில்லியன் ரிங்கிட் செலவை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

இந்தத் தள்ளுபடி மார்ச் 18 அன்று அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வரும். பின்னர் மறுநாள் மார்ச் 19 அன்று இரவு 11.59 மணிக்கு முடிவடையும்.

அச்சலுகைமுதல் வகுப்பு தனியார் வாகனங்களுக்கு மட்டுமே. நாட்டின் எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குப்பாங் டோல் சுங்க சாவடிகளில் அச்சலுகை இல்லை.

Related News