Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பூடி95 திட்டத்தில் 300 லிட்டரையும் பயன்படுத்திய 0.6 % மக்கள் – கணக்குச் சொன்ன நிதி அமைச்சு!
தற்போதைய செய்திகள்

பூடி95 திட்டத்தில் 300 லிட்டரையும் பயன்படுத்திய 0.6 % மக்கள் – கணக்குச் சொன்ன நிதி அமைச்சு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

பூடி95 மானியத் திட்டத்தில் மாதாந்திர 300 லிட்டர் ரோன்95 பெட்ரோல் ஒதுக்கீடு, கிட்டத்தட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை அரசாங்கத்தின் தொடக்க நிலைப் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில், மானியம் பெறும் பயனாளிகளில் 0.6 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 லிட்டர் பெட்ரோலையும் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று 2வது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் அறிவித்துள்ளார்.

பெரும்பாலான மலேசியர்களின் சராசரி மாதப் பயன்பாடு சுமார் 80 லிட்டர்கள் மட்டுமே என்பதால், 300 லிட்டர் ஒதுக்கீட்டைக் குறைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று அவர் வதந்திகளை மறுத்துள்ளார். இந்தத் தரவுகள், அரசு நிர்ணயித்த ஒதுக்கீடு பெரும்பாலான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மானியத் தொகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்று அரசாங்கம் நம்புகிறதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை