கோலாலம்பூரில் லெபு ராயா மாஜு எனும் MEX அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 31 வயது இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டி வந்த கார் தவறான திசையில் நுழைந்து, எதிரே வந்த இ-ஹெய்லிங் வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், இ-ஹெய்லிங் வாகனத்தில் பயணம் செய்த 22 வயது வெளிநாட்டு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். KLIA-வில் இருந்து வந்த மேலும் இரு வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் 41 வயது ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோதனையில் இராணுவ அதிகாரி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மது அருந்தியது உறுதியானது. தற்போது அவர் மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவின் கீழ் மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.








