சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான 178 சிக்கல்களுக்கு, இரு தரப்பிற்கும் பாதிப்பில்லாத வகையில் மாநில அரசு 'வெற்றி-வெற்றி' அணுகுமுறை மூலம் தீர்வு கண்டு வருகிறது.
இது குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறுகையில், "வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். பன்முகத்தன்மை கொண்ட சிலாங்கூரின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரங்கள் மிகவும் முதிர்ச்சியான முறையில் கையாளப்பட்டு வருகின்றன," என்று உறுதியளித்தார்.
வழிபாட்டுத் தல விவகாரங்களில் பிடிவாதமாக இல்லாமல், நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுவதே மாநிலத்தின் அமைதிக்கு அடிப்படை என்பதை வலியுறுத்திய அவர், சட்டச் சிக்கல்களைத் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுமூகத் தீர்வு காண மாநில அரசு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.








