Mar 23, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமா? பின்னணியில் உள்ள அந்த NGO-வை விசாரணை செய்வீர்
தற்போதைய செய்திகள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிராக எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமா? பின்னணியில் உள்ள அந்த NGO-வை விசாரணை செய்வீர்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக வரும் ஜுன் 29 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு முன் எதிர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமருக்கு எதிரான இந்த எதிர்ப்புப் பேரணிக்கு பின்னணியில் ஒரு NGO இருப்பது தொடர்பில் அது குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று போலீசாரை PKR கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இப்படியொரு எதிர்ப்பு பேரணி நடத்தப்படுவதானது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மறைமுகமாக விடக்கப்படும் ஓர் அச்சுறுத்தலாகும்.

இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாஙகத்தை கவிழ்ப்பதற்கு மக்களை தூண்டிவிடும் முயற்சியாகும் என்று PKR கட்சியின் புத்ராஜெயா தொகுதி தலைவர் Fikri Aziz தெரிவித்துள்ளார்.

இப்படியொரு எதிர்ப்பு பேரணி நடத்தப்படுவது மூலம் அது தேசிய பாதுகாப்பிற்கு மிரட்டல் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத் திட்டங்களை வேண்டுமென்றே நாசப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சதி முயற்சியாகும்.

எனவே இது குறித்து போலீஸ் துறை உடனடியாக புலன் விசாரணை மேற்கொண்டு, இந்த எதிர்ப்பு பேரணிக்கு பின்னணியில் உள்ள அந்த NGO-வின் உண்மையான நோக்கம் கண்டறியப்பட வேண்டும் என்று அந்த PKR தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை