Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் கனமழை, வெள்ளப் பெருக்கு – 1700-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு இடமாற்றம்!
தற்போதைய செய்திகள்

பேராவில் கனமழை, வெள்ளப் பெருக்கு – 1700-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு இடமாற்றம்!

Share:

ஈப்போ, அக்டோபர்.24-

பேராக் மாநிலம் மஞ்சோங், லாருட், மாத்தாங் மற்றும் செலாமா ஆகிய மாவட்டங்களில் நேற்று பல மணி நேரங்கள் பெய்த கனமழை காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த 1,776 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் 23 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

லாருட், மாத்தாங் & செலாமா மாவட்டத்தில் மட்டும் 35 கிராமங்களுக்கும் மேல் இந்த கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், இன்று வெள்ளிக்கிழமை எல்எம்எஸ், உலு பேராக், கோல கங்சார், கிந்தா மற்றும் ஹிலிர் பேராக் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related News

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை