Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் கனமழை, வெள்ளப் பெருக்கு – 1700-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு இடமாற்றம்!
தற்போதைய செய்திகள்

பேராவில் கனமழை, வெள்ளப் பெருக்கு – 1700-க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு இடமாற்றம்!

Share:

ஈப்போ, அக்டோபர்.24-

பேராக் மாநிலம் மஞ்சோங், லாருட், மாத்தாங் மற்றும் செலாமா ஆகிய மாவட்டங்களில் நேற்று பல மணி நேரங்கள் பெய்த கனமழை காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த 1,776 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் 23 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

லாருட், மாத்தாங் & செலாமா மாவட்டத்தில் மட்டும் 35 கிராமங்களுக்கும் மேல் இந்த கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், இன்று வெள்ளிக்கிழமை எல்எம்எஸ், உலு பேராக், கோல கங்சார், கிந்தா மற்றும் ஹிலிர் பேராக் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு