மலேசியாவில் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்றும், அதற்கான கட்டணம் 350 ரிங்கிட் என்றும் அரசாங்க அரசிதழ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கடப்பிதழ்களைப் பெறுவதற்கு 175 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கடப்பிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மலேசியர்களுக்கு தற்போது 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழ்களுக்கு 200 ரிங்கிட்டும், மூத்த குடிமக்களுக்கு 100 ரிங்கிட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
மேலும், சேதமடைந்த அல்லது தொலைந்துபோன கடப்பிதழ்களை மாற்றி புதிய கடப்பிதழ்கள் பெறுவதற்கான கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
அதன் படி, 13 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிமக்கள், முதல் முறையாக, புதிய கடப்பிதழ்களைப் பெற 550 ரிங்கிட் செலுத்த வேண்டும்.
இது முன்பு அதன் கட்டணம் 400 ஆக இருந்தது என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








