Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி
தற்போதைய செய்திகள்

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

Share:

குனுங் பத்து புத்தே மலையில் மாயமான ஜாஸ்லிண்டா சாலுடின்-ஐக் கண்டறியும் மீட்பு நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டாலும் கூட, தங்களால் முடிந்தவரை தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளரும், பேராக் மாநில மந்திரி பெசாரின் ஓராங் அஸ்லி விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியுமான சியூ ஹோ பெங் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

அதன் படி, 22 செமாய் தன்னார்வலர்களைக் கொண்ட குழு, கடந்த மே 24-ஆம் தேதி காணாமல் போன ஜாஸ்லிண்டாவைக் கண்டுபிடிக்கப்படக்கூடிய அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்பாக கெம் சுகானேகா மற்றும் குனுங் ராயு பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக சியூ ஹோ பெங் குறிப்பிட்டுள்ளார்.

தேடுதல் நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் தங்களது அனுபவத்தின் அடிப்படையில், காணாமல் போன ஜாஸ்லிண்டா அப்பகுதிகளிலேயே இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு