சிரம்பான், தாமான் சிரம்பான் ஜெயாவில் கார் ஒன்று எரிக்கப்பட்டது தொடர்பில், விசாரணைக்கு உதவும் வகையில் இரு ஆடவர்களைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில், தாமான் சிரம்பான் ஜெயாவில் உள்ள தமது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், 50 விழுக்காடு வரை எரிந்திருந்ததாக, 19 வயதுடைய ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நந்தா மரூஃப் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்ட 17 மற்றும் 22 வயதுடைய அவ்விரு ஆடவர்களும், எளிதில் எரியக்கூடிய என சந்தேகிக்கப்படும் திரவம் ஒன்றை காரின் மீது வீசிவிட்டு தப்பி ஓடியதாக நந்தா மரூஃப் குறிப்பிட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 435 பிரிவின் கீழ், அவ்விரு ஆடவர்களும் குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


