சிரம்பான், தாமான் சிரம்பான் ஜெயாவில் கார் ஒன்று எரிக்கப்பட்டது தொடர்பில், விசாரணைக்கு உதவும் வகையில் இரு ஆடவர்களைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில், தாமான் சிரம்பான் ஜெயாவில் உள்ள தமது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், 50 விழுக்காடு வரை எரிந்திருந்ததாக, 19 வயதுடைய ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நந்தா மரூஃப் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்ட 17 மற்றும் 22 வயதுடைய அவ்விரு ஆடவர்களும், எளிதில் எரியக்கூடிய என சந்தேகிக்கப்படும் திரவம் ஒன்றை காரின் மீது வீசிவிட்டு தப்பி ஓடியதாக நந்தா மரூஃப் குறிப்பிட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 435 பிரிவின் கீழ், அவ்விரு ஆடவர்களும் குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


