Mar 13, 2026
Thisaigal NewsYouTube
துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு
தற்போதைய செய்திகள்

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.18-

ஜோகூர் பாருவில் காரில் அமர்ந்திருந்த காதலர்களை Taser எனப்படும் மின்சார அதிர்ச்சி கருவியைக் காட்டி மிரட்டி,கைப்பேசிகளையும் பணத்தையும் பறித்துச் சென்ற கொள்ளையர்களை அந்த ஜோடி துணிச்சலுடன் விரட்டிச் சென்றது. கொள்ளையர்களிடம் அஞ்சாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் காரில் விரட்டிச் சென்ற 18 வயது இளைஞர், பண்டார் ஜெயா புத்ராவில் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் மீது தனது காரை மோதி அவர்களைக் கீழே விழச் செய்தார்.

இந்த மோதலில் சுமார் 7,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள் கீழே விழுந்த போதிலும், தப்பியோடி மறைந்து விட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் காவற்படைத் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார். ஆயுதம் ஏந்திய கூட்டுக் கொள்ளைப் பிரிவின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ள காவற்படையினர் , தப்பியோடிய அந்த இரு நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு