Jan 18, 2026
Thisaigal NewsYouTube
துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு
தற்போதைய செய்திகள்

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.18-

ஜோகூர் பாருவில் காரில் அமர்ந்திருந்த காதலர்களை Taser எனப்படும் மின்சார அதிர்ச்சி கருவியைக் காட்டி மிரட்டி,கைப்பேசிகளையும் பணத்தையும் பறித்துச் சென்ற கொள்ளையர்களை அந்த ஜோடி துணிச்சலுடன் விரட்டிச் சென்றது. கொள்ளையர்களிடம் அஞ்சாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் காரில் விரட்டிச் சென்ற 18 வயது இளைஞர், பண்டார் ஜெயா புத்ராவில் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் மீது தனது காரை மோதி அவர்களைக் கீழே விழச் செய்தார்.

இந்த மோதலில் சுமார் 7,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள் கீழே விழுந்த போதிலும், தப்பியோடி மறைந்து விட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் காவற்படைத் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார். ஆயுதம் ஏந்திய கூட்டுக் கொள்ளைப் பிரிவின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ள காவற்படையினர் , தப்பியோடிய அந்த இரு நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்

வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்