Jul 5, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசப் பிரஜைகளை உள்ளடக்கிய தீவிரவாதக் கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு: ஐஜிபி கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

வங்காளதேசப் பிரஜைகளை உள்ளடக்கிய தீவிரவாதக் கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு: ஐஜிபி கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.04-

டிஜிட்டலைத் தளமாக கொண்டு மலேசியாவில் தீவிரவாத சிந்தனையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்ட வங்காளதேசப் பிரஜைகளை உள்ளடக்கிய தீவிரவாதக் கும்பலை அரச மலேசிய போலீஸ் படை வெற்றிகரகமாக முறியடித்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

அரச மலேசியப் போலீஸ் படை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் 25 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 36 வங்களாதேசிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பயங்கரவாதத் துடைத்தொழிப்பு சிறப்புப் படையின் மூலம் சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் மேற்கொள்ளப்பட்டசோதனை நடவடிக்கையில் இந்த 36 பேரும் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி தெரிவித்தார்.

அந்நிய நாட்டவர்களின் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் துடைத்தொழிப்பதற்கு அரச மலேசியப் போலீஸ் படை கொண்டுள்ள வியூகமே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டு வரும் என்று டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் விளக்கினார்.

Related News

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி