Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இரு வளர்ப்பு மகள்களைப் பாலியல் பலாக்காரம் செய்த தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை, 18 பிரம்படிகள்!
தற்போதைய செய்திகள்

இரு வளர்ப்பு மகள்களைப் பாலியல் பலாக்காரம் செய்த தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை, 18 பிரம்படிகள்!

Share:

சிபு, நவம்பர்.01-

தனது இரு இளம் வயது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 35 வயது வளர்ப்புத் தந்தைக்கு, சிபு அமர்வு நீதிமன்றம் மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 18 பிரம்படிகளையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் மின் நிறுவன ஊழியரான அந்த ஆடவர், தன் மீதான ஒன்பது குற்றச்சாட்டுகளை நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொண்டதோடு, தன்னை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

என்றாலும், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் சிந்தியா எமெல்டா ஜேரி, குற்றவாளி இரு சிறுமிகளையும் தனது ஆசைக்குப் பயன்படுத்தியிருப்பது மிகக் கடுமையான குற்றம் என்று வலியுறுத்தி, கடுமையான தண்டனை கோரினார்.

வளர்ப்புத் தந்தையால் இரு இளம் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் கடுமையானக் குற்றமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி முஷிரி பீட், தண்டனைகள் ஒன்றின் பின் ஒன்றாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

15 மற்றும் 16 வயதான அந்த இரண்டு சிறுமிகளும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் குற்றவாளியால் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, அவர்கள் தங்கள் தாயிடம் நடந்ததை தெரிவித்ததையடுத்து, வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி