Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இரு வளர்ப்பு மகள்களைப் பாலியல் பலாக்காரம் செய்த தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை, 18 பிரம்படிகள்!
தற்போதைய செய்திகள்

இரு வளர்ப்பு மகள்களைப் பாலியல் பலாக்காரம் செய்த தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை, 18 பிரம்படிகள்!

Share:

சிபு, நவம்பர்.01-

தனது இரு இளம் வயது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 35 வயது வளர்ப்புத் தந்தைக்கு, சிபு அமர்வு நீதிமன்றம் மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 18 பிரம்படிகளையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் மின் நிறுவன ஊழியரான அந்த ஆடவர், தன் மீதான ஒன்பது குற்றச்சாட்டுகளை நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொண்டதோடு, தன்னை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

என்றாலும், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் சிந்தியா எமெல்டா ஜேரி, குற்றவாளி இரு சிறுமிகளையும் தனது ஆசைக்குப் பயன்படுத்தியிருப்பது மிகக் கடுமையான குற்றம் என்று வலியுறுத்தி, கடுமையான தண்டனை கோரினார்.

வளர்ப்புத் தந்தையால் இரு இளம் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் கடுமையானக் குற்றமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி முஷிரி பீட், தண்டனைகள் ஒன்றின் பின் ஒன்றாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

15 மற்றும் 16 வயதான அந்த இரண்டு சிறுமிகளும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் குற்றவாளியால் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, அவர்கள் தங்கள் தாயிடம் நடந்ததை தெரிவித்ததையடுத்து, வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை