Mar 17, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் 11 அமலாக்க அதிகாரிகள் கைது!
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் 11 அமலாக்க அதிகாரிகள் கைது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவிற்குள் அனுமதிக்க, லஞ்சம் பெற்றதாக 10 அமலாக்க அதிகாரிகளையும், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

குடிநுழைவுத் துறையின் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை விரைபடுத்துவதற்காக, அவர்கள் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகின்றது.

இதனையடுத்து, 7 ஆண் அதிகாரிகளும், 4 பெண் அதிகாரிகளும் நேற்று கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 1 லட்சத்து 16,000 ரிங்கிட் ரொக்கத் தொகை, 14 தொலைத் தொடர்பு சாதனங்கள், தங்க நகைகள், கார்கள் மற்றும் மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முந்தைய, செட்டிங் முகப்பிட ஊழல் விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு