பேறு குறைந்த மூன்று அந்நிய நாட்டவர்களைப் பிச்சை எடுக்க வைத்து பணம் ஈட்டிய 49 வயதுடைய உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அலோர்ஸ்டார் மாநகர் மன்றம், ஜாலான் துங்கு இப்ராஹிம் சாலையில், honda city ரக வாகனத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, பிச்சை எடுக்க வைத்து கட்டாயப்படுத்தியதாக நம்பப்படும் 45 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய, பேறு குறைந்த 3 கம்போடியர்களை போலீசார் மீட்டனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹாசான் வான் ஹமாட் தெரிவித்துள்ளார்.
அம்மூவரும் ஜொகூர், hulu tiram மிலிருந்து Alor setar க்கும் அழைத்து வரப்பட்டு, அங்குள்ள காலை சந்தை மற்றும் ரமலான் சந்தைகளில் பிச்சை எடுக்கும்படி நிர்பந்தம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று வான் ஹாசான் குறிப்பிட்டுள்ளார்.
இச்சோதனையில் கைத்தொலைபேசிகள், கடழ்ப்பிதழ்கள் , இதரப் பொருட்கள் மற்றும் ஆயிரத்து 20 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போதைய செய்திகள்
பேறு குறைந்த அந்நிய நாட்டவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த ஆடவர் கைது
Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


