May 28, 2026
Thisaigal NewsYouTube
இளைஞரைக்  கன்னத்தில் அறைந்த முதியவரிடம் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

இளைஞரைக் கன்னத்தில் அறைந்த முதியவரிடம் போலீஸ் விசாரணை

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.18-

நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவருந்தியதாகக் கூறி, முஸ்லிம் அல்லாத ஓர் இளைஞரைக் கன்னத்தில் அறைந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். அதே வேளையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த முதியவரின் மகன் மற்றும் சில சாட்சிகளிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் உணவகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து புகார் செய்த சீன ஆடவரின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். அந்த ஆடவர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இன்று ஜோகூர் இஸ்கண்டார் புத்ரி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் டத்தோ குமார் தெரிவித்தார்.

விசாரணை முடிவடைந்ததும், வரும் வெள்ளிக்கிழமை விசாரணை அறிக்கை , உரிய நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்