பள்ளிகள் உட்பட தொண்டமைப்புகளுக்கு வழங்கக்கூடிய அரசாங்க மானியங்களுக்கு பயன்படுத்தப்படும் காசோலை அட்டைகளில் கட்சி சின்னங்கள் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.
வருகின்ற ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத்தேர்தல்களின் பிரச்சாரத்தின் போதும் வழங்கப்படக்கூடிய மத்திய அரசாங்கத்தின் உதவி பொருட்களிலும் கட்சி சின்னங்கள் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் பேராக் மாநிலத்தில் சீனப்பள்ளிகள் சிலவற்றுக்கு வழங்கப்பட்ட அரசாங்க மானிய காசோலை அட்டைகளில் டிஏபி சின்னம் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ள வேளையில் பிரதமர் இந்த நினைவுறுத்தலை விடுத்துள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


