May 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் சிக்கிய 4,000 மலேசியர்கள்: தாய்லாந்தில் இருந்து மீட்க தீவிர முயற்சி!
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய 4,000 மலேசியர்கள்: தாய்லாந்தில் இருந்து மீட்க தீவிர முயற்சி!

Share:

சொங்க்லா, நவம்பர்.23-

தாய்லாந்தின் Hatyaiயில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சுமார் 4,000 மலேசியப் பயணிகள் சிக்கியுள்ளதாகவும், இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மலேசிய அரசு முடுக்கிவிட்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். அங்குள்ள மலேசியத் தூதரகங்கள் மூலம் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 40 ஆசிரியர்களையும் மாணவர்களையும் உள்ளடக்கிய சிக்கித் தவிப்பவர்களை விரைவாக நாட்டுக்குக் கொண்டு வர ஒருங்கிணைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேசிய அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் நவம்பர் 13 முதல் தயார் நிலையில் உள்ளன என்றும், அதிகனமழைக்கான எச்சரிக்கை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிளந்தான், திரெங்கானு, பகாங், பெர்லிஸ் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தொடக்கக்கட்ட எச்சரிக்கையைப் பின்பற்றி, உயிரிழப்பையும் உடைமை இழப்பையும் தவிர்க்குமாறு ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்