Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கனமழையிலும் வட மாநிலங்களில் இரயில் சேவைகளில் தடை இல்லை - கேடிஎம்பி தகவல்
தற்போதைய செய்திகள்

கனமழையிலும் வட மாநிலங்களில் இரயில் சேவைகளில் தடை இல்லை - கேடிஎம்பி தகவல்

Share:

கங்கார், நவம்பர்.25-

மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழையும், வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களில் இயங்கி வரும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் தடையின்றி வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

என்றாலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சில தாமதங்கள் பதிவாகியுள்ளன.

தொடர் கனமழைக்கு மத்தியில் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு இரயில் பாதைகளில் நீர் மட்டங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

கேடிஎம்பி நிறுவனத்தின் செயல்பாட்டுக் குழுவினர் அதிக எச்சரிக்கையுடன் நிலைமையைக் கண்காணித்து வருவதோடு, அதிகாரப்பூர்வப் பக்கங்களில் உடனுக்குடன் தகவல் தெரிவித்து வருவதாகவும் கேடிஎம்பி தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

பெர்லிஸில் நேற்று கனமழை காரணமாக கேடிஎம்பி ஆராவ் இரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலை உட்பட பல்வேறு சாலைகள் மூடப்பட்டன.

இது போல் பல்வேறு மாநிலங்களில் கனமழை காரணமாக சாலைகள் பல மூடப்பட்டு வருகின்றன.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு