Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: கல்வி அமைச்சு சகித்துக் கொள்ளாது
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: கல்வி அமைச்சு சகித்துக் கொள்ளாது

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-

காஜாங்கில் ஓர் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை இரண்டாம் படிவ மாணவன் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களின் தவறான நடத்தையில் கல்வி அமைச்சு ஒரு போதும் சமரசப் போக்கை கடைப்பிடிக்காது என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் மீண்டும் நினைவுறுத்தியுள்ளார்.

மாணவர்களிடையே தவறான புரிதல் காரணமாக பள்ளித் தரப்பினரும், அமலாக்கத் தரப்பினரும் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக இந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது என்று தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஃபாட்லீனா குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் போலீசார் இதுவரை நான்கு மாணவர்களைக் கைது செய்து இருப்பதாக அவர் விளக்கினார்.

இவ்விவகாரத்தில் போலீசாரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதையும் ஃபாட்லீனா தெளிவுபடுத்தினார்.

Related News

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

 ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி