May 26, 2026
Thisaigal NewsYouTube
இறந்தவரின் உடமைகளை திருடியதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இறந்தவரின் உடமைகளை திருடியதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், நவ.22-


கோலாலம்பூர் , ஸ்தாபாக்கில் தனது காருக்குள் இறந்து கிடந்த மாது ஒருவரை சோதனை செய்வது போல், அவரின் கழுத்தில் காணப்பட்ட நெக்ரெஸ் மற்றும் கைளில் அணிந்திருந்த தங்க கைசங்கிலி, காப்பு முதலிய தங்க ஆபரணங்களை திருடியதாக போலீஸ்காரர் ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டார்.

35 வயது லான்ஸ் காப்பரல் முகமட்அலிபா முகமட்சாபி என்ற அந்த போலீஸ்காரர், காருக்குள் இறந்து கிடந்த 26 வயது மாது ஒருவரின் தங்க ஆபரணங்களை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த அக்டேபார் முதல் தேதி அதிகாலை 2.40 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு, பிரிமா ஸ்தாபாக் ரோட், கார் நிறுத்தும் இடத்தில் லான்ஸ் காப்பரல் முகமட்அலிபா , இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 379 பிரிவின் கீழ் அநத் போலீஸ்காரர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 3,500 வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் அருண்ஜோதி அனுமதித்தார்.

காரில் இறந்து கிடந்த தமது மகள் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் காணவில்லை என்று அந்தப் பெண்ணின் தந்தையான ஒரு முன்னாள் போலீஸ்காரர் செய்து கொண்ட புகார் தொடர்பில் இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

காரிலிருந்து அந்தப் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட போது அவர் எந்தவொரு நகையும் அணிந்திக்கவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தந்தைக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்த இதன் தொடர்பில் அவர் போலீசில் புகார் செய்தார்.

Related News

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு