பேரா மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை பேரா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமாட்டிற்கு வழங்க முன்வந்துள்ளனர்.
இத்தகவலை பேரா மாநில பிகேஆர் கட்சித் தலைவர் முஹமாட் அரஃபாட் வரிசாய் முஹமாட் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஈப்போவில் தாம் சந்தித்த போது அவர்கள் தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாக முஹமாட் அரஃபாட் குறிப்பிட்டார்.








