May 6, 2026
Thisaigal NewsYouTube
இடுப்பு எலும்பு முறிவுக்குப் பிறகு துன் மகாதீர் முதல் முறையாக பொதுவெளியில் தோற்றம்
தற்போதைய செய்திகள்

இடுப்பு எலும்பு முறிவுக்குப் பிறகு துன் மகாதீர் முதல் முறையாக பொதுவெளியில் தோற்றம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இன்று செவ்வாய்க்கிழமை பெவிலியன் டாமான்சாரா ஹைட்ஸ் வணிக வளாகத்தில் காணப்பட்டார்.

தேசிய இருதய சிகிச்சைக்கழகமான ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வந்த பிறகு, அவர் பொதுவெளியில் மேற்கொண்ட முதல் பயணம் இதுவென அவரது உதவியாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்தார்.

இருப்பினும், டாக்டர் மகாதீர் இன்னும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றும், இது ஒரு சிறிய 'காபி பிரேக்' இடைவேளை மட்டுமே என்றும் அவர் கூறினார். சுஃபி பகிர்ந்துள்ள புகைப்படத்தில், 100 வயதான மூத்த அரசியல்வாதியான மகாதீர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, அதிகாரிகள் உதவியுடன் ஓர் உணவகத்தில் இருப்பதைக் காண முடிகிறது.

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி, தனது இல்லத்தில் தவறி விழுந்ததில் மகாதீருக்கு வலது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் ஐஜேஎன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாத பிசியோதெரபி சிகிச்சையைப் பெற்று வருகிறார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்