தங்கும் வசதியைக் கொண்ட தாஹ்விஸ் சமயப்பள்ளி கட்டடம் தீப்பற்றிக்கொண்டதில் அப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் பின்னிரவு 12.55 மணியளவில் சிலாங்கூர்,கோல லங்காட், தெலோக் பங்லிமா காராங்கில் கம்போங் மேடான்னில் நிகழ்ந்தது. பள்ளி கட்டடத்தின் நாலாபுறமும் தீ சூழ்ந்து விட்ட நிலையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 13 க்கும் 17 க்கும் இடைப்பட்ட வயதுடைய மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேறி, உயிர்த்தப்பினர். இச்சம்பவத்தில் அந்த சமயப்பள்ளியின் கட்டடம் 70 விழுக்காடு சேதமுற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முஹமாட் ரசாலி தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


