தங்கும் வசதியைக் கொண்ட தாஹ்விஸ் சமயப்பள்ளி கட்டடம் தீப்பற்றிக்கொண்டதில் அப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் பின்னிரவு 12.55 மணியளவில் சிலாங்கூர்,கோல லங்காட், தெலோக் பங்லிமா காராங்கில் கம்போங் மேடான்னில் நிகழ்ந்தது. பள்ளி கட்டடத்தின் நாலாபுறமும் தீ சூழ்ந்து விட்ட நிலையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 13 க்கும் 17 க்கும் இடைப்பட்ட வயதுடைய மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேறி, உயிர்த்தப்பினர். இச்சம்பவத்தில் அந்த சமயப்பள்ளியின் கட்டடம் 70 விழுக்காடு சேதமுற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முஹமாட் ரசாலி தெரிவித்தார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


