வயது குறைந்தப் பிள்ளைகளை ஒரு தலைபட்சமாக மதம் மாற்றம் செய்யும் மாநில சட்டங்கள், சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி 14 பேர் தொடுத்துள்ள வழக்கில் குறுக்கிடுவதற்கு கோலாலம்பூர் ஷரியா வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு விண்ணப்பத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகளை முடிவு செய்வதற்கு நடைபெற்ற வழக்கில் அந்த 14 பேர் தொடுத்துள்ள வழக்கில் தாங்களும் ஒரு தரப்பாக பங்கு கொள்வதற்கு ஷரியா வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக வாதிகள் தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் அனுமதித்தால் அவர்களின் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்ய முடியும் என்று பெர்லிஸ் உட்பட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநில சட்டங்கள் செல்லத்தக்கது அல்ல என்று அறிவிக்கக் கோரி அந்த 14 பேரும் வழக்கு தொடுத்துள்ளனர்.

Related News

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்


