வயது குறைந்தப் பிள்ளைகளை ஒரு தலைபட்சமாக மதம் மாற்றம் செய்யும் மாநில சட்டங்கள், சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி 14 பேர் தொடுத்துள்ள வழக்கில் குறுக்கிடுவதற்கு கோலாலம்பூர் ஷரியா வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு விண்ணப்பத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகளை முடிவு செய்வதற்கு நடைபெற்ற வழக்கில் அந்த 14 பேர் தொடுத்துள்ள வழக்கில் தாங்களும் ஒரு தரப்பாக பங்கு கொள்வதற்கு ஷரியா வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக வாதிகள் தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் அனுமதித்தால் அவர்களின் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்ய முடியும் என்று பெர்லிஸ் உட்பட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநில சட்டங்கள் செல்லத்தக்கது அல்ல என்று அறிவிக்கக் கோரி அந்த 14 பேரும் வழக்கு தொடுத்துள்ளனர்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


