May 28, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சாலை சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை கார் மோதியது

Share:

சிரம்பான், மார்ச்.07-

சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்று கொண்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை கார் ஒன்று மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் சிரம்பான், மாத்தாஹாரி ஹைட் பகுதியில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் மொடெனாஸ் கிரிஸ் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 15,16 வயதுடைய இரு இளைஞர்கள் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

இதர மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹத்தா சே டின் தெரிவித்தார்.

17 வயதுடைய பயணியுடன் ஹொண்டா ஜாஸ் வாகனத்தில் பயணித்த 18 வயது நபர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News