Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் மத்தியில் சமூகச் சீர்கேடுகள் அதிகரிப்பு: பேரா சுல்தான் அச்சம்
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் மத்தியில் சமூகச் சீர்கேடுகள் அதிகரிப்பு: பேரா சுல்தான் அச்சம்

Share:

ஈப்போ, நவம்பர்.05-

மாணவர்கள் மத்தியில் சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருவது குறித்து மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அச்சம் தெரிவித்துள்ளார்.

"குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானப் புகலிடமாக இருக்க வேண்டிய பள்ளிகள், தற்போது அவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சூழல்களுக்கு ஆளாகின்றன.”

17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே பகடிவதை, வன்முறை, பாலியல் பலாத்காரம், மரணங்கள், கொலைகள் போன்ற பள்ளி சூழலில் நிகழக்கூடிய சம்பவங்கள் அண்மையாக காலமாக நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதாக சுல்தான் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்களானது மனித மதிப்புகளை வளர்ப்பதில் கல்வி தனது பங்கை நிறைவேற்றத் தவறியதை பிரதிபலிக்கின்றன. இதன் விளைவாக உணர்ச்சிகரமான நெருக்கடிகள் மற்றும் உளவியல் துயரங்கள் ஏற்படுகின்றன.

எனவே பள்ளிகளிலும், உயர்க்கல்விக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் ஆளுமைக்குரிய சுய அடையாளம் நிறுவப்பட வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

இன்று ஈப்போவில் Dewan Bankuet Bangunan Perak Darul Ridzuan-னில் 2025 ஆம் ஆண்டுக்கான ஒருமைப்பாடு மாதம் நிகழ்வில் உரையாற்றுகையில் சுல்தான் நஸ்ரின் ஷா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்