Jul 4, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையில் மோதல், மலேசியா கவலை
தற்போதைய செய்திகள்

தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையில் மோதல், மலேசியா கவலை

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் குறித்து மலேசியா கவலை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் நிகழ்ந்து வரும் இராணுவ மோதல் தொடர்ந்து உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்புக்கு வித்திட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்றுள்ள நிலையில் அந்த கூட்டமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் மோதல் வலுத்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று காலையில் இரு நாடுகளின் இராணுவப் படையினரும் மோதிக் கொண்டதில் கணிசமான அளவில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதட்டத்தைத் தணிக்க இரு நாடுகளும் உடனடியாக சமரப் பேச்சு வார்த்தையில் இறங்க வேண்டும் என்று முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது