மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்தது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜுன் மாதம் மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்துள்ள துன் மகாதீரின் இந்நடவடிக்கை தொடபில் அவரிடம் புக்கிட் அமான் போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர் என்று வழக்கறிஞர் ரபீக் ரஷீத் அலி தெரிவித்தார். போலீசாரின் இந்த வாக்குமூலப் பதிவு, யாயாசான் ஆல் புக்காரி யில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். துன் மகாதீரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வாக்கு மூலப்பதிவு 30 நிமிடமே நடைபெற்றதாக வழக்கறிஞர் ரபீக் விளக்கினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


