Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பலாபெஸ் மாணவன் மரணம்: தற்காப்பு அமைச்சர் அறிக்கை வெளியிடக்கூடாது
தற்போதைய செய்திகள்

பலாபெஸ் மாணவன் மரணம்: தற்காப்பு அமைச்சர் அறிக்கை வெளியிடக்கூடாது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.26-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் Palapes ( பலாபெஸ் ) பயிற்சி மாணவர் ஷம்சூல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் தொடர்பான விசாரணை முடியும் வரையில் எந்தவோர் அறிக்கையும் வெளியிடக்கூடாது என்பதற்கு தற்காப்பு அமைச்சரும், தற்காப்பு அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அந்த மாணவரின் 45 வயது தாயார் உம்மு ஹைமான் பீ டவுலாட்கான் தாக்கல் செய்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதிவாதிகள், இந்த உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த மாதுவின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியுள்ள கூட்டரசு முதிர்நிலை வழக்கறிஞர் ரொஸிஸா சிடேக் வழங்கிய அந்த உடன்பாட்டிற்கான நகல் கடிதத்தைத் தாங்கள் பெற்றுள்ளதாக நரான் சிங் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் பயிற்சி மாணவரின் மரணம் தொடர்பில் தற்காப்பு அமைச்சரும், தற்காப்பு அமைச்சும், தகவல் சாதனங்களின் எந்தவோர் அறிக்கையும் வெளியிடக்கூடாது என்பதற்கு உடன்பட்டுள்ளனர் என்று நரான் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்