Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பலாபெஸ் மாணவன் மரணம்: தற்காப்பு அமைச்சர் அறிக்கை வெளியிடக்கூடாது
தற்போதைய செய்திகள்

பலாபெஸ் மாணவன் மரணம்: தற்காப்பு அமைச்சர் அறிக்கை வெளியிடக்கூடாது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.26-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் Palapes ( பலாபெஸ் ) பயிற்சி மாணவர் ஷம்சூல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் தொடர்பான விசாரணை முடியும் வரையில் எந்தவோர் அறிக்கையும் வெளியிடக்கூடாது என்பதற்கு தற்காப்பு அமைச்சரும், தற்காப்பு அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அந்த மாணவரின் 45 வயது தாயார் உம்மு ஹைமான் பீ டவுலாட்கான் தாக்கல் செய்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதிவாதிகள், இந்த உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த மாதுவின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியுள்ள கூட்டரசு முதிர்நிலை வழக்கறிஞர் ரொஸிஸா சிடேக் வழங்கிய அந்த உடன்பாட்டிற்கான நகல் கடிதத்தைத் தாங்கள் பெற்றுள்ளதாக நரான் சிங் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் பயிற்சி மாணவரின் மரணம் தொடர்பில் தற்காப்பு அமைச்சரும், தற்காப்பு அமைச்சும், தகவல் சாதனங்களின் எந்தவோர் அறிக்கையும் வெளியிடக்கூடாது என்பதற்கு உடன்பட்டுள்ளனர் என்று நரான் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related News

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு