காஜாங்கில் பிரபல வர்த்தகரும், மருத்துவருமான டாக்டர் முகமட் உஸ்மான் சான் பாசா கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பில் இ-ஹைலிங் வாகன ஓட்டுநர் உட்பட இரு நபர்கள் வரும் திங்கட்கிழமை காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர். குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த இரு நபர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
குடும்பத்தினரிடம் பிணைப்பணம் கேட்டு, மிரட்டப்பட்ட ஓர் இந்திய முஸ்லிம் மருத்துவரான 41 வயதுடைய டாக்டர் உஸ்மானின் உடல், உலு லங்காட்டில் உள்ள ஒரு மலைப்பகுதியில் பயணப்பெட்டிக்குள் கண்டு பிடிக்கப்பட்டது. டாக்டர் உஸ்மான் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி காஜாங்கிலிருந்து கடத்தப்பட்டுள்ளார்.
காஜாங், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங், பங்சார், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் தமது சொந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் உஸ்மான், கடத்தப்பட்டு, அவரின் குடும்பத்திடமிருந்து 2 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கேட்டு மிரட்டப்பட்ட நிலையில் அவர், மின்சாரக் கம்பினால் கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு சடலம் வீசப்பட்டுள்ளது.
நான்கு பேரை உள்ளடக்கிய குடும்பத்தில் கடைசிப்பிள்ளையான டாக்டர் உஸ்மான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார். விஸ்கொன்சின் - மடிசொன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவரான டாக்டர் ஊஸ்மான் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது மலேசிய மருத்துவ மற்றும் அறிவியல் துறைக்குப் பேரிழப்பாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


