Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பிலபல மருத்துவர் டாக்டர் உஸ்மான் கொலை இருவர் ​மீது கொலை குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

பிலபல மருத்துவர் டாக்டர் உஸ்மான் கொலை இருவர் ​மீது கொலை குற்றச்சா​ட்டு

Share:

காஜாங்கில் பிரபல வர்த்தகரும், மருத்துவருமான டாக்டர் முகமட் உஸ்மான் சான் பாசா கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பில் இ-ஹைலிங் வாகன ஓட்டுநர் உட்பட இரு நபர்கள் வரும் திங்கட்கிழமை காஜாங் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர். குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் அந்த இரு நபர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும்.

குடும்பத்தினரிடம் பிணைப்பணம் கேட்டு, மிரட்டப்பட்ட ஓர் இந்திய முஸ்லிம் மருத்துவரான 41 வயதுடைய டாக்டர் உஸ்மானின் உடல், உலு லங்காட்டில் உ​ள்ள ஒரு மலைப்பகுதியில் பயணப்பெட்டிக்குள் கண்டு பிடிக்கப்பட்டது. டாக்டர் உஸ்மான் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி காஜா​ங்கி​லிருந்து கடத்தப்பட்டுள்ளார்.

காஜாங், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங், பங்சார், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் தமது சொந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் உஸ்மான், கடத்தப்பட்டு, அவரின் குடும்பத்திடமிருந்து 2 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கேட்டு மிரட்டப்பட்ட நிலையில் அவர், மின்சாரக் கம்பினால் கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு சடலம் வீசப்பட்டுள்ளது.

நான்கு பேரை உள்ளடக்கிய குடும்பத்தில் கடைசிப்பிள்ளையான டாக்டர் உஸ்மான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரு​ம்பினார். விஸ்கொன்சின் - மடிசொன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவரான டாக்டர் ஊஸ்மான் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது மலேசிய மருத்துவ மற்றும் அறிவியல் துறைக்குப் பேரிழப்பாகு​ம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு