Mar 21, 2026
Thisaigal NewsYouTube
டையலிசிஸ் மையம், செபராங் ஜெயா மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்
தற்போதைய செய்திகள்

டையலிசிஸ் மையம், செபராங் ஜெயா மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்

Share:

பட்டர்வொர்த், செப்டம்பர்.20-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ, பினாங்கு, செபெராங் ஜெயாவில் டையலிசிஸ் மையத்தை அமைத்து இருப்பது, சிறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வட மாநிலத்தில் உள்ள சொக்சோ சந்தாதாரர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சிறுநீரக நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை அளிக்க வல்ல இந்த டையலிசிஸ் மையம், நாள் ஒன்றுக்கு சராசரி 36 நோயாளிகள் டையலிசியஸ் சிகிச்சை பெறுவதற்குரிய வசதியைக் கொண்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

இந்த மையத்தில் டையலிசியஸ் சிகிச்சையைப் பெறும் சொக்சோ சந்தாதாரர்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அதற்குரிய செலவினத்தை சொக்சோ நிறுவனமே ஏற்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.

செபராங் ஜெயா மருத்துவமனை, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மிக அருகிலேயே இருப்பதால் வியூகம் நிறைந்த இடத்தில் செபராங் ஜெயா டையலிசியஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று சனிக்கிழமை செபராங் ஜெயா டையலிசியஸ் மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றுகையில் ஸ்டீவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து