தனது முகநூலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அநாகரிகமாக விமர்சித்து, கருத்து பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் பெண் உதவி போலீஸ்காரர் ஒருவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பதிவேற்றத்தை கண்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு 10.22 மணியளவில் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தலைமையேற்றுள்ள பிரதமரை அவமதிக்கும் வகையில் தீய நோக்குடன் அந்த பெண் உதவி போலீஸ்காரர், ஓர் இடுகையை தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக கமருல் ஜமான் குறிப்பிட்டார்.
அப்பெண் மெர்சிங்கில் ஒரு உதவி போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கமருல் ஜமான் மேலும் தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


