தனது முகநூலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அநாகரிகமாக விமர்சித்து, கருத்து பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் பெண் உதவி போலீஸ்காரர் ஒருவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பதிவேற்றத்தை கண்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு 10.22 மணியளவில் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தலைமையேற்றுள்ள பிரதமரை அவமதிக்கும் வகையில் தீய நோக்குடன் அந்த பெண் உதவி போலீஸ்காரர், ஓர் இடுகையை தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக கமருல் ஜமான் குறிப்பிட்டார்.
அப்பெண் மெர்சிங்கில் ஒரு உதவி போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கமருல் ஜமான் மேலும் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


