Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் இரு புதல்வர்கள் சம்பந்தப்பட்ட சொத்து விவகாரங்களில் ஸ்.பி.ஆர்.எம் மனநிறைவு

Share:

புத்ராஜெயா, ஜன.21-

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் இரு புதல்வர்களான Mokhzani Mahathir மற்றும் Mirzan Mahathir ஆகியோரின் சொத்து விபரங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மனைநிறைவு கொள்வதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

மகாதீரின் இரு புதல்வர்களின் சொத்து விபரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்ததில் தாம் மனநிறைவு கொள்வதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

31 கோடியே 60 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தனது தனிப்பட்ட சொத்துக்களுடன் கிட்டத்தட்ட 100 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை மொக்ஸானி காட்டியிருப்பதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அதேவேளையில் அவரின் சகோதரர் Mirzan Mahathir, 24 கோடியே 62 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை காட்டியுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இவ்விரு சகோதரர்களின் சொத்து விபரங்கள், தடயவியல் ஆய்வாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இன்னும் சில விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாததால் விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

துன் மகாதீரின் இரு புதல்வர்கள் சம்பந்தப்பட்ட சொத்து விவகா... | Thisaigal News