May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் இரு புதல்வர்கள் சம்பந்தப்பட்ட சொத்து விவகாரங்களில் ஸ்.பி.ஆர்.எம் மனநிறைவு

Share:

புத்ராஜெயா, ஜன.21-

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் இரு புதல்வர்களான Mokhzani Mahathir மற்றும் Mirzan Mahathir ஆகியோரின் சொத்து விபரங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மனைநிறைவு கொள்வதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

மகாதீரின் இரு புதல்வர்களின் சொத்து விபரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்ததில் தாம் மனநிறைவு கொள்வதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

31 கோடியே 60 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தனது தனிப்பட்ட சொத்துக்களுடன் கிட்டத்தட்ட 100 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை மொக்ஸானி காட்டியிருப்பதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அதேவேளையில் அவரின் சகோதரர் Mirzan Mahathir, 24 கோடியே 62 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை காட்டியுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இவ்விரு சகோதரர்களின் சொத்து விபரங்கள், தடயவியல் ஆய்வாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இன்னும் சில விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாததால் விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்