May 5, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவுக்குப் பயணம் செய்யும் மலேசியர்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அவசியம் - மலேசியத் தூதரகம் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் மலேசியர்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அவசியம் - மலேசியத் தூதரகம் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

இந்தியாவிற்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் நிபா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதுடெல்லியில் உள்ள மலேசியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

நிபா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் மலேசியர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும், முடிந்தவரை கூட்டமான இடங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலேசிய சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவில் தங்கியிருக்கும் மலேசியர்களும் அடிக்கடி கைகளைக் கழுவுவது உட்பட, கடுமையான தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, நீரில் சுத்தம் செய்யப்படாத பழங்கள் அல்லது அசுத்தமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் நிபா வைரஸ் குறித்த நிலவரங்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள மலேசியத் தூதரகம், உடனுக்குடன் அது குறித்த தகவல்களை வழங்கவிருப்பதாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்