Jan 30, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு
தற்போதைய செய்திகள்

விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு

Share:

கோல திரங்கானு, ஜனவரி.30-

கோல திரங்கானு மாவட்டம் கம்போங் சிம்பாங் தோக் கூவில் உள்ள விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், அக்கடையானது முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

கடந்த 5 ஆண்டுகளாக அக்கடையை நடத்தி வந்த அதன் உரிமையாளர்களுக்கு இவ்விபத்து காரணமாக 1மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, கடையில் இருந்த 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத் தொகை உட்பட மொத்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமானதாக அதன் உரிமையாளர் மாயா சுஹைடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோல திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 24 வீரர்கள், அரைமணி நேரத்திற்கும் மேல் போராடி, தீயை அணைத்ததாக, அதன் தலைவர் தொயிபா தையிப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உயர் பதவி வகிப்பவர்களாக இருந்தாலும் லஞ்ச ஊழல் விவகாரங்களில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் திட்டவட்டம்

உயர் பதவி வகிப்பவர்களாக இருந்தாலும் லஞ்ச ஊழல் விவகாரங்களில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் திட்டவட்டம்

மூத்த ஆயுதப்படை அதிகாரி மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

மூத்த ஆயுதப்படை அதிகாரி மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் மலேசியர்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அவசியம் - மலேசியத் தூதரகம் எச்சரிக்கை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் மலேசியர்களுக்கு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அவசியம் - மலேசியத் தூதரகம் எச்சரிக்கை

உள்ளூர் வாகனங்களை சட்டவிரோதமாக வெளிநாட்டினர் பயன்படுத்த அனுமதிக்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை - ஜேபிஜே அறிவிப்பு

உள்ளூர் வாகனங்களை சட்டவிரோதமாக வெளிநாட்டினர் பயன்படுத்த அனுமதிக்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை - ஜேபிஜே அறிவிப்பு

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு

APAD ஒப்புதல் கிடைத்த பிறகு ECRL கட்டணத்தை அரசாங்கம் அறிவிக்கும்

APAD ஒப்புதல் கிடைத்த பிறகு ECRL கட்டணத்தை அரசாங்கம் அறிவிக்கும்