May 5, 2026
Thisaigal NewsYouTube
மூத்த ஆயுதப்படை அதிகாரி மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

மூத்த ஆயுதப்படை அதிகாரி மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ நல நிதியிலிருந்து 5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.

இராணுவ கூட்டு ஆயுதப்படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரியானஃபௌஸி காமிஸ், நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, தனது வாக்குமூலத்தைப் பதிவுச் செய்தார்.

இராணுவ நல நிதியிலிருந்து 5 மில்லியன் ரிங்கிட்டை, நல வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், Precious Amber International Bhd என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக ஃபௌஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி, ஜாலான் பாடாங் தேம்பாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இக்குற்றத்தை அவர் புரிந்ததாக நம்பப்படுகின்றது.

நம்பிக்கை மோசடிக்கான குற்றவியல் சட்டம் பிரிவு 409-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்களானது நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்