கோலாலம்பூர் , ஆகஸ்ட் 21-
செவ்வாய்கிழமை மாலை, சிலாங்கூர், பந்தர் சன்வே-யில் உள்ள சாலையின் நடுவே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த சந்தேக நபர் பட்டியலில் உள்ள வெளிநாட்டவர் குறித்து போலிஸ் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அச்சம்பவத்திற்கு தொடர்புடைய மற்றவர்களையும் போலிஸ் தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன்தெரிவித்தார்.
கொள்ளையடிப்பது, நகைகளை விற்பனை செய்தல், வெளிநாட்டு நாணயத்தை மாற்றுதல் மற்றும் பல வணிகங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பரிவர்த்தனை சேவைகளை விளம்பரப்படுத்துவது போன்றவற்றில் நேற்று தாக்குதல் மேற்கொண்ட குழுவிற்கு தொடர்பு உள்ளது எனறு அவர் கூறினார்.








