Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக் கைதி அனில் ராஜ் குடும்பத்திற்கு 4 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

தடுப்புக் கைதி அனில் ராஜ் குடும்பத்திற்கு 4 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.08-

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த போது அனில் ராஜ் என்பவர் காச நோயினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் குடும்பத்திற்கு 4 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

சிறைச்சாலை வார்டன்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் கவனக்குறைவினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

அந்த தடுப்புக் கைதிக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்குவதிலும், அவரை கவனித்துக் கொள்வதிலும் சிறைச்சாலை இலாகாவினர் தவறிவிட்டனர் என்பதை அனில் ராஜ் தாயார் ஆர். உதய சுந்தரியும், தந்தை ஆர்.ரவிச்சந்திரனும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கதீஜா இட்ரிஸ் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சுங்கை பூலோ சிறைச்சாலையின் மூத்த அதிகாரிகள், வார்டன்கள், அந்த சிறைச்சாலையில் உள்ள மூன்று மருத்துவர்கள் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக உதயசுந்தரியும் ரவிச்சந்திரனும் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.

சுங்கை பூலோ சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கையானது, 1995 ஆடம் ஆண்டு சிறைச்சாலை சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிபதி கதீஜா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி