ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மிண்டனில் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய், வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து
21-10, 21-15 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வென் சி ஹூவை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்
சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.








