கோலாலம்பூர் மாநகரை சுற்றிப்பார்ப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இலவச பேருந்து சேவையான GoKL போக்குவரத்தை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.
பச்சை, ஊதா, சிவப்பு, நீலம் ஆகிய நான்கு வர்ணங்களின் அடிப்படையில் பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.
இக்கட்டணத்தை செலுத்துவதற்கு டச் என் கோ, QR குறியீடு, கிரெடிட் கார்டு போன்ற பண பரிவர்த்தனை முறையை பயன்படுத்த முடியும். 12 வயதுக்கு கீழ்பட்டவர்கள் இலவச சலுகையை அனுபவிக்கலாம் என்று மாநகர் மன்றம் விளக்கம் அளித்துள்ளது.








