Mar 23, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நால்வர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நால்வர் படுங்காயம்

Share:

லஹாட் டத்து, ஜூன் 21-

சபா, பத்து 9 ஜாலான் சிலம் என்ற இடத்தில் விரைவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் படுங்காயம் அடைந்துள்ளனர்.

செம்போர்னா -விலிருந்து கோத்தா கினபாலு -விற்கு 16 பயணிகள், இரண்டு ஓட்டுநர்கள் உட்பட ஒரு பேருந்து நடத்துநர் என மொத்தம் 19 பேரை ஏற்றிச் சென்ற அப்பேருந்து விபத்துக்குள்ளாகியதாக லஹாட் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் சும்சோ ரஷீத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேருந்து 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக சிலர் அப்பேருந்திலிருந்து தானாகவே வெளியேற முயற்சித்ததாகவும் சும்சோ ரஷீத் கூறினார்.

விபத்தில் காயமுற்ற நான்கு பேரும் லஹாட் டத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளை, இச்சம்பவம் ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சும்சோ ரஷீத் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை