May 26, 2026
Thisaigal NewsYouTube
மேலும் 48 மணி நேரம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மேலும் 48 மணி நேரம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

Share:

டிச. 22-

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய ஏர்பஸ் A330 neo விமானம், தனது முதல் பயணத்திலிருந்தே தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததால், மேலும் 48 மணி நேரம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை உற்பத்தித் தரமும் விமான விநியோகத்தில் ஏற்பட்டக் குறைபாடுகளுமே இதற்குக் காரணம் என்று Malaysia Aviation Group தெரிவித்துள்ளது.

புதிய விமானத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு அசல் பாகங்கள் உற்பத்தியாளர்களே பொறுப்பு என்றும் MAG நிர்வாக இயக்குநர் Izham Ismail தெரிவித்தார். இந்த சிக்கல் மலேசியா ஏர்லைன்ஸின் நற்பெயரைக் கெடுப்பதாகவும் அவர் கூறினார்.

Rolls-Royce Trend 7000 இயந்திரத்தால் இயங்கும் இந்த புதிய விமானம், கோலாலம்பூரில் இருந்து Melbourneனுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது இயந்திரக் கோளாறுகளைச் சந்தித்தது. இதனால், அடுத்தடுத்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்த தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய ஏர்பஸ் நிறுவனம் மலேசியா ஏர்லைன்ஸுக்கு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளது. தற்போது, கோலாலம்பூரில் இருந்து Melbourneனுக்கான பயணத்திற்கு பிற மாடல் விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் என்று Izham Ismail கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு