சமூக வலைதளங்களில் தற்போது ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அதில், ஒரு இடுகாட்டில் நிர்வாணமான நிலையில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
38 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு நபர் முழு நிர்வாணமாக முதுகைக் காட்டியபடி நிற்கிறார். ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் ஒரு கல்லறையின் மீது அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.
இந்தச் சம்பவத்தைப் படம்பிடித்த பெண், அந்த ஜோடியைக் கடுமையாகச் சாடுகிறார். "உங்களை மறுபடியும் இங்கே பிடித்துவிட்டேன்! நீங்கள் ஏற்கனவே பலமுறை கல்லறை மீது ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். இது இறந்தவர்களை அவமதிக்கும் செயலாகும். நான் போலீசாரை அழைக்கப்போகிறேன்," என்று அவர் ஆவேசமாகக் கூறுகிறார்.
அந்தப் பெண் திட்டிக்கொண்டிருக்கும் போதே, அந்த நபர் அமைதியாக தனது கால்சட்டையை அணிந்துகொள்கிறார். இடுகாடு என்பது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் இடம் என்று அந்தப் பெண் தொடர்ந்து கண்டித்தபோது, அந்த நபர் மன்னிப்புக் கேட்கிறார். இருப்பினும், அந்தப் பெண் மன்னிப்பை ஏற்க மறுத்து, இந்த வீடியோவை போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்போவதாக எச்சரிக்கிறார்.








