கோத்தா பாரு,ஜன.11
கிளந்தான் பாசிர் மாஸ் மற்றும் தும்பாட் ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட OPS TAPIS KHAS சோதனை நடவடிக்கையில் ஒரு தம்பதியர் உட்பட நால்வரை கைது செய்தது மூலம் இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாசிர் மாஸ்ஸில் கம்போங் குவால் அராங் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 70 வயது முதியவ ர் கைது செய்யப்பட்டது மூலம் பரவசமூட்டும் 80 போதை மாத்திரைகளையும் Kuzey GN19 ரகத்திலான ஒரு துப்பாக்கியையும், 10 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமாட் சக்கி ஹருன் தெரிவித்தார்.
தவிர, அந்த முதியவரின் 27 வயது மகனும் கைது செய்யப்பட்டார். பின்னர் தும்பாட், கம்போங் கெத்திங் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் 26, 31 வயதுடைய ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து Glock ரகத்திலான ஒரு துப்பாக்கியையும் 31 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக முஹமாட் சக்கி ஹருன் குறிப்பிட்டார்.








