பெரிக்காத்தான் நேஷனல் தலைமையில் பாஸ் கட்சி, ஜோகூர் மாநிலத்தில் ஊடுருவதற்கும், அந்த மாநிலத்தை கைப்பற்றுவதற்கும் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் ஒரு களமாக பயன்படுத்தப்படும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநரும், கெடா மாநில மந்திரி பெசாருமான முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
வரும் இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் அமானா வேட்பாளரை தோற்கடித்து, சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியை பாஸ் கட்சி கைப்பற்றுமானால் ஜோகூர் மாநிலத்தை பாஸ் கட்சி கைப்பற்றுவது உறுதி என்று அவர் விளக்கினார்.
நாடு முழுவதும் பச்சை அலை வீசத் தொடங்கி விட்டது. இதில் ஜோகூர் மாநிலம் மட்டும் விதிவிலக்கு அல்ல என்று சனூசி குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


