கொலை வழக்கு தொடர்பில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆடவர் ஒருவர், பினாங்கு பாலத்தின் 3.4 ஆவது கிலோ மீட்டரில் கடலில் குதித்த போது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
29 வயதுடைய அந்த நபர், கடலில் குதிப்பதற்கு முன்னதாக பட்டர்வொர்த்தில் உள்ள 40 வயது மாதுவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையே நேரில் பார்த்த பொது மக்கள், அந்த ஆடவரை துரத்தி பிடிக்க முயற்சித்தனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு மோட்டார் சைக்கிள் மூலம் பினாங்கு பாலத்திற்கு கடக்க முற்பட்ட அந்த நபர், மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு கடலில் குதித்ததாக விசாரணையில்தெரிய வந்துள்ளது என்று செபாராங் பெராய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அஸ்ரி ஷஃபி குறிப்பிட்டார்.








